மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!
Apr 29, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!

சுற்றுலாப் பயணிகள் வருகையால் விழாக்கோலம் பூண்ட நகரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவைக் காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. முதலில் மன்னர்கள் குடும்பத்தினரால் மட்டுமே தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1980 முதல் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 412 தசரா விழாக்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன.

இந்த நிலையில், 413-வது தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 14 யானைகள் வெவ்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டன. இந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மைசூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கப்படும். இதற்காக, ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, மைசூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பிரமோதா தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று சுப விருச்சிக லக்கனத்தில் வெள்ளி ரதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவி சிலைக்கு மலர் தூவி பூஜை செய்தும், குத்துவிளக்கேற்றியும் 413-வது தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.

மைசூர் தசரா விழா உலகப்புகழ் பெற்றது என்பதால், இத்திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Next Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies