மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!
Jul 29, 2026, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!

சுற்றுலாப் பயணிகள் வருகையால் விழாக்கோலம் பூண்ட நகரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவைக் காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. முதலில் மன்னர்கள் குடும்பத்தினரால் மட்டுமே தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1980 முதல் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 412 தசரா விழாக்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன.

இந்த நிலையில், 413-வது தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 14 யானைகள் வெவ்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டன. இந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மைசூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கப்படும். இதற்காக, ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, மைசூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பிரமோதா தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று சுப விருச்சிக லக்கனத்தில் வெள்ளி ரதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவி சிலைக்கு மலர் தூவி பூஜை செய்தும், குத்துவிளக்கேற்றியும் 413-வது தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.

மைசூர் தசரா விழா உலகப்புகழ் பெற்றது என்பதால், இத்திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Next Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies