கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!
Sep 10, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிற்றாறு ஒன்று மற்றும் இரண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் பரளியாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால், அணையில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் 40 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆறுகளில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடையிடையே, பெய்து வரும் கனமழையால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.35 அடியாகவும், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.25 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 616 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Tags: kanniyakumariheavy rainrain fall
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து தோல்விக்கு இது தான் காரணம் – சச்சின் !

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 43.64 அடியாக அதிகரிப்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies