இங்கிலாந்து தோல்விக்கு இது தான் காரணம் - சச்சின் !
Sep 1, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்து தோல்விக்கு இது தான் காரணம் – சச்சின் !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி செய்த தவறுகள் என்ன என்பதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அதன்பின் ஆடிய 14 உலகக்கோப்பைப் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த நிலையில், டெல்லியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியையே சம்பவம் செய்து அசத்தியுள்ளது. இரு தரமான வேகப்பந்துவீச்சாளர்கள், 3 தரமான ஸ்பின்னர்களைக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சாதித்துள்ளது.

Wonderful all-round effort by Afghanistan led by a solid knock from @RGurbaz_21.

Bad day for @ECB_cricket.
Against quality spinners, you have to read them from their hand, which the England batters failed to do. They read them off the pitch instead, which I felt led to their… pic.twitter.com/O4TACfKh21

— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2023

இங்கிலாந்து அணியின் இந்தத் தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறியதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் ஆற்றல் மிகச்சிறப்பாக இருந்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

இங்கிலாந்து அணிக்கு இது மோசமான நாள். எந்தவொரு பேட்ஸ்மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது, அவர்களது கையில் பந்து இருக்கும் போதே கணிக்க வேண்டும். அவர்கள் பந்தை எப்படி போடுகிறார்கள், எப்படி போட்டால் பந்து எப்படி திரும்பும் என்பதை பேட்ஸ்மேனாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்ய தவறிவிட்டனர். அதுதான் அவர்களின் சரிவுக்கு காரணமாக இருந்ததாக பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: sachin tendulkarengland vs afghanistan
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

Next Post

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies