முதலமைச்சர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, மத்திய பிரதேசத்தில், ஆன்லைன் மூலம் மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், நிதியுதவி வழங்குவதாகவும், சிறுதொழில் தொடங்க கடன் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
பின்னர் அதற்கான பதிவு கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், செயலாக்க கட்டணம் என கூறி தலா ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த கும்பல் வசூலித்து, நிதியுதவி வழங்காமலும் கடன் பெற்றுத் தராமலும் மக்களை ஏமாற்றியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது தொடர்பாக 6 புகார்கள் பதிவாகியுள்ளதாக இந்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடப்பதாகவும், இத்தகைய மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக சைபர் காவல்துறையின் உதவியை இந்தூர் காவல்துறை நாடியுள்ளது.
















