கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கில் கைதான கொலைகார தம்பதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கூடுவாஞ்சேரியில் மாணிக் உத்தினுக்கும், நிஷாவிற்கும் இடையே இருந்த தகாத உறவால் நிஷா கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனிடையே நிஷாவிடம் கருவை கலைக்குமாறு மாணிக் வலிறுத்தியதாக தெரிகிறது.
கருவை கலைக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணிக், தனது மனைவி பகமதி மாஜியுடன் சேர்ந்து நிஷாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கொலைகார தம்பதியை கைது செய்தனர். இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
நிஷாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி அண்டாவில் போட்டதாகவும், தலையை வைத்து உடலை அடையாளம் காண்பதை தடுக்க, முடி மற்றும் தசையை அகற்றி சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாகவும் அந்த தம்பதி தெரிவித்தனர். தலையை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் கொலைகார தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.















