சீனா மற்றும் நேபாள நதிகள் இணையும் இடத்திற்கு அருகே உருவாகியுள்ள புதிய ஏரி சில நாட்களில் உடைந்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் ரசுவா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடர்பாடுகளில் மாயமாகினர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சீன அதிகாரிகள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் சோசென் நதியும் – புரேபு நதியும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே புதிய ஏரி உருவாகியுள்ளதாகவும், இதில் 2 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஏரிக்கு நீர்வரத்து உள்ளதால் மூன்று நாட்களில் ஏரி உடைய வாய்ப்புள்ளதாகவும், கரையோர மக்கள் மற்றும் மீட்புப் படையினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் சீன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
















