வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், தனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும் இன்றி, வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய் பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துகிறது என்றும், நமது எண்ணெய் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியவர்களுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
















