நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்தது.
திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. திரும்பும் திசையெங்கும் கட்டடங்கள் மண்ணில் புதைந்துள்ளதால், மீட்புப் பணி பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் உடல் பாகங்கள் மட்டுமே கிடைப்பதால், அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
















