திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி பௌர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமியையொட்டி அதிகாலை முதலே திருச்செந்தூர் கோயிலில் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானின் அருளை பெற்றனர். மேலும், ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
















