நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பக்தர்கள் காணாமல் போனதாக, அந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் திபெத் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கி வாசுதேவ், கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் ஒரு பகுதியாக நேபாளத்தின் கியிரோங் பகுதிக்குச் சென்ற ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக கூறினார்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 80 பக்தர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை என தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவின் அளவு மிகவும் கொடூரமாக இருப்பதாகவும் ஜக்கி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.
















