பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்ததற்கு, அவரது ஆலோசகர்களே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக இருந்தால், மாற்று இடத்தை தேர்வு செய்த பின் அறிவிக்கலாம் என முதல்வர் விஜய் தரப்பிடம் உயர் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இடைத்தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,
இதனால் பரந்தூர் திட்டத்தை கைவிடும் முடிவை அறிவிக்க வேண்டுமெனவும் முதல்வர் தரப்புக்கு, அவரது ஆலோசகர்கள் யோசனை கூறியதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பரந்துாருக்கு நேரில் சென்று, போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த திட்டத்தை கைவிடும் முடிவை முதல்வரே வெளியிட வேண்டும் என்றும், இதுதான் எதிர்கால அரசியலுக்கு அடித்தளம் எனவும் முதல்வரின் ஆலோசகர்கள் கூறியதாகவும் தெரிகிறது.
அதை ஏற்று முதல்வர் விஜய் பரந்தூர் திட்டம் ரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















