தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் என “வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மற்றும் வீ த லீடர் அமைப்பு சார்பில், ஆயிரத்து எட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அண்ணாமலை பங்கேற்று பள்ளி நிர்வாகிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, மாணவர்களிடம் மரங்களின் அவசியம், புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கும் சூழல் உள்ளதாகக் கூறினார்.
புவி வெப்பமயமாதலை குறைத்து, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அதிகளவில் மரங்களை நட வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாறி அடுத்த தலைமுறைக்காக மரங்களை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















