தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் பதிலளிக்காவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும்,
அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதேபோல, ஆதவ் அர்ஜுனா தரப்பிலும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது என்றும்,
தேர்தல் வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அவகாசம் வழங்குவதாகவும்,
அதற்குள் நிராகரிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
















