நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் தமிழகத்திலிருந்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கடந்த 23ம் தேதி தமிழர்கள் 57 பேர் நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில், தமிழர்கள் சிக்கிய நிலையில், அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து பேட்டியளித்த கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி, கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 17 பேர் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சையது சாதிக், தமிழர்கள் சென்ற 3 வேனில், 2 வேன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
















