காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் கர்நாடக அரசு தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காததால், ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணை திறப்பு குறித்து நல்ல செய்தி வரும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையில் போலீசார் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
















