நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நேபாள பேரிடரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பது தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுடெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையில் ஒரு குழுவை காத்மாண்டுவிற்கு அனுப்பி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதுடன், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி செல்லவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
















