சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
புதிய விமான நிலையம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில், ஏக்கருக்கு 6 முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை, 18 முதல் 35 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது.
விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் LAY OUT பிளாட்டுகளின் விலையும், சதுர அடிக்கு 1,600 முதல் 1,850 ரூபாய் வரை அதிகரித்தது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய முக்கியப் பகுதிகளில், ஒரு சதுர அடி 2,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத் திட்டத்தை நம்பி பல ஏக்கர் நிலங்களை வாங்கிய முதலீட்டாளர்கள் மற்றும் நில புரமோட்டர்கள், தற்போது அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
















