ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகே பாலசுப்பிரமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை புலி தாக்கி கொன்றதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். புலியை பிடிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூடலூரில் கடைகள் அடைக்கப்பட்டதுடன், வாகனப் போக்குவரத்தும் குறைந்து நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















