5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைகோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட தடையை நீக்க வேண்டும் என்றும், மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 6 மாதத்திற்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தலுக்கு தடை கோரி தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















