நேபாளத்தில் மீட்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் காவல்துறை உட்பட 13 ஆயிரத்து 295 பேர் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 573 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
















