நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குளி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருண், தருண், வெங்கட் ஆகிய 3 சகோதரர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் இருவர் மருத்துவப் படிப்பில் சேர தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அந்த சகோதரர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
















