நேபாளத்தில் ஏற்பட்டது மிகவும் கொடூரமான பேரிடர் என தெரிவித்துள்ள ட்ரம்ப், அந்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், பாதிக்கப்பட்ட பகுதியில் 50 முதல் 60 அமெரிக்கர்கள் வரை இருந்ததாகவும், அவர்களின் நிலை குறித்து முழுமையான விவரம் இன்னும் கிடைக்கவில்லை என கூறினார்.
அங்குப் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கவலை தெரிவித்த டிரம்ப், நேபாள அரசு கேட்கும் அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், பலம் வாய்ந்த பெரிய கட்டடங்கள் கூட குச்சிகளை போல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
















