வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நேபாளத்தில் இருந்து முதல்கட்டமாக 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூரைச் சேர்ந்த 9 பேர், மயிலாடுதுறை மற்றும் திருச்சியை சேர்ந்த தலா 3 பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 21 பேர் சென்னை வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் சரத்குமார் நேரில் வரவேற்றனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் ஆனந்த், மீதமுள்ள தமிழர்களையும் மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள், தங்களை பத்திரமாக அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
















