நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திபெத் பகுதியில் 400 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். கைலாஷ் யாத்திரை சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், இந்தியர்கள் 320 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறினார். தற்போது வரை 21 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் இந்திய அரசு வழங்கும் என்றும், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட உள்ளதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
















