நேபாள பெருவெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் தமிழர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றனர். அப்போது, தூதரகம் வாயிலாக தங்களை மீட்க உதவி செய்த நேபாள போலீசார் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.
















