பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவ, நிவாரணப் பொருட்களுடன் மூன்றாவது விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.
10 டன் அளவுள்ள நிவாரணப் பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், மின்சார ஜெனரேட்டர் கருவிகள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நிவாரணப் பொருட்களுடன், மருத்துவர்கள், சுரங்கப்பாதை மீட்புப் பணிகளுக்கான ஆய்வுக் குழுவை சேர்ந்த 11 பேர் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேபாளத்திற்கு அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
















