அமெரிக்காவில் இஸ்கான் உணவகத்தில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மோகன் பாகவத் நியூயார்க் சென்றுள்ளார். அங்குள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் இன்று உரையாற்றவுள்ளார்.
இதனிடையே, நியூயார்க்கில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு வீடற்ற மக்களுக்கு உணவு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகில் எண்ணற்ற மோதல்களும் வேறுபாடுகளும் உள்ள நிலையில், கிருஷ்ணர் குறித்த அறிதல்தான் மனிதர்களை ஒன்றிணைக்கும் என கூறினார்.
















