நேபாளத்தில் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து, 93 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெருவெள்ளத்தில் ரசுவா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முழுமையாக சேதமடைந்த வங்கி ஒன்றில் இருந்து பாதுகாப்பு பெட்டகம் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
பெட்டகத்தை ஒரு கும்பல் உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது.
இதையடுத்து, தாடிங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெட்டகத்தை உடைத்ததாக 29 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக 92 லட்சத்து 68 ஆயிரத்து 505 ரூபாயை மீட்டனர்.
பெருவெள்ளத்தால் உயிர்களையும், உடமைகளையும் இழந்து மக்கள் தவித்து வரும் சூழலில், பண ஆசையால், 29 பேர் சிறை சென்று வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.
















