அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் மக்கள் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
















