திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக சட்டம்-ஒழுங்கு மற்றும் கோயில் கட்டண வசூல் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலுக்கு சென்ற ஹெச்.ராஜா, தியாகராஜ சுவாமி, ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடையம்மன் சன்னதிகளில் வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். விஜய் தலைமையிலான ஆட்சியை மதிப்பிட இன்னும் கால அவகாசம் தேவை என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு செயல்பாடுகளை மதிப்பிடலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோயில்களில் பாலாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ‘கொள்ளை’ என விமர்சித்த அவர், கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டு கோயில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















