அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் உற்சாக வரவேற்பு அளித்தார்.
உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் மோடி, 4 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் தாஷ்கண்ட் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் ஆரத்தழுவி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து தாஷ்கண்ட் விமான நிலையத்தில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதரம் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்டவை குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
















