ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ஒரே நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் கைகுலுக்கி உரையாடியது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்பு, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை ஒரே நேரத்தில் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கி உற்சாகமாக உரையாடினார்.
சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்தியாவின் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இரு வலிமையான நாடுகளின் தலைவர்களையும் ஒரே நேரத்தில் அணுகி பிரதமர் மோடி உரையாடியது, அவரது ராஜதந்திரத்தை வெளிப்படுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
















