செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?
Jun 28, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஜூன் 14 -ம் தேதி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆனால், செந்தில் பாலாஜிக்கு திடீர் இருதய கோளாறு காரணமாக, தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இதற்கு, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 10 -ம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றார்.

இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் அவர் வழக்கின் சாட்சியங்களை கலைத்து விடுவார் என எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Tags: chennai high courtdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

இங்கிலாந்து தோல்விக்கு இது தான் காரணம் – சச்சின் !

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies