பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி அம்பலமான நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட மூவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்ந்து பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில், ஆயக்குடி பகுதியில் தனியார் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புதிய முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழனியில் 100 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஆயக்குடி நிலத்தையும் முறைகேடாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, தற்போதைய பழனி சார்பதிவாளர் ஈஸ்வரி அளித்த புகார் அடிப்படையில், ஜஸ்டின் மணிகண்டன், போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற மணி, நிலத்தை வாங்கிய கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















