கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக ஆட்சியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க கோவையில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.
திமுக ஆட்சியிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர், ஜி ஸ்கொயர் வாங்கியுள்ள இடத்தில் புறம்போக்காக உள்ள 99 ஏக்கர் நிலத்தில் மைதானம் கட்டலாம் என யோசனை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பத்து ஒலிம்பிக் மையங்களில் கோவையிலும் ஒன்று அமைய உள்ளது என குறிப்பிட்டார். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிக்கு எந்தவொரு தனியார் நிறுவனமும் விருப்பம் தெரிவிக்கவில்லை எனக்கூறிய அவர், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை எந்தவொரு விளையாட்டு போட்டிகளையும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
















