குஜராத்தில் நவராத்திரி விழா: "கர்பா" நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!
Oct 25, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் நவராத்திரி விழா: “கர்பா” நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் பெண்கள் தலையில் மண்பானைகளை வைத்துக்கொண்டு ‘கர்பா’ நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நவராத்திரி பண்டிகையானது அசுரன் மகிஷாசுரனை தோற்கடித்ததையும், தீமையின் மீது நன்மை வென்றதையும் போற்றுகிறது. நவராத்திரியின் 10-வது நாள் தசரா அல்லது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவராத்திரியின் போது ராம்லீலா விரிவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ராம்லீலாவின் போது, ​​ராமர் ராவணனை வெற்றிகொண்ட கதை காட்சிப்படுத்தப்படும்.

இந்த, நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். இவ்விழா நாட்களில் மக்கள் துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வணங்கி வழிபாடு நடத்துவார்கள். மேலும், இந்த 9 நாட்களில் மக்கள் சடங்கு மற்றும் விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்களைப் படிக்கிறார்கள். புதிய ஆடைகளை அணிவார்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளில் வளமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில், 2-ம் நாளான நேற்று இரவு மக்கள் துர்கா தேவியின் அவதாரங்களில் ஒன்றான பிரம்மச்சாரிணியை வணங்கினார்கள். இந்து மத நூல்களின்படி, துர்கையின் வடிவமான பிரம்மச்சாரிணி பார்வதி தேவியால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தவத்தின் அடையாளமாகும். பிரம்மச்சாரிணி வெண்ணிற ஆடைகளை அணிந்து, வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தி இருக்கிறார். இந்த தேவியை வழிபடுவதால், மந்திரம் மற்றும் தவம் செய்யும் சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமானோர் ‘கர்பா’ நிகழ்ச்சியை நடத்தினர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்கள் ஆர்வத்துடன் ‘கர்பா’ இசைக்கு நடனமாடினர். அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது பெண்கள் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags: Gujratnavarathiri festivelGarba Dance
ShareTweetSendShare
Previous Post

கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்!

Next Post

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies