குஜராத்தில் நவராத்திரி விழா: "கர்பா" நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!
Mar 15, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் நவராத்திரி விழா: “கர்பா” நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் பெண்கள் தலையில் மண்பானைகளை வைத்துக்கொண்டு ‘கர்பா’ நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நவராத்திரி பண்டிகையானது அசுரன் மகிஷாசுரனை தோற்கடித்ததையும், தீமையின் மீது நன்மை வென்றதையும் போற்றுகிறது. நவராத்திரியின் 10-வது நாள் தசரா அல்லது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவராத்திரியின் போது ராம்லீலா விரிவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ராம்லீலாவின் போது, ​​ராமர் ராவணனை வெற்றிகொண்ட கதை காட்சிப்படுத்தப்படும்.

இந்த, நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். இவ்விழா நாட்களில் மக்கள் துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வணங்கி வழிபாடு நடத்துவார்கள். மேலும், இந்த 9 நாட்களில் மக்கள் சடங்கு மற்றும் விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்களைப் படிக்கிறார்கள். புதிய ஆடைகளை அணிவார்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளில் வளமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில், 2-ம் நாளான நேற்று இரவு மக்கள் துர்கா தேவியின் அவதாரங்களில் ஒன்றான பிரம்மச்சாரிணியை வணங்கினார்கள். இந்து மத நூல்களின்படி, துர்கையின் வடிவமான பிரம்மச்சாரிணி பார்வதி தேவியால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தவத்தின் அடையாளமாகும். பிரம்மச்சாரிணி வெண்ணிற ஆடைகளை அணிந்து, வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தி இருக்கிறார். இந்த தேவியை வழிபடுவதால், மந்திரம் மற்றும் தவம் செய்யும் சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமானோர் ‘கர்பா’ நிகழ்ச்சியை நடத்தினர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்கள் ஆர்வத்துடன் ‘கர்பா’ இசைக்கு நடனமாடினர். அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது பெண்கள் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags: Gujratnavarathiri festivelGarba Dance
ShareTweetSendShare
Previous Post

கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்!

Next Post

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies