குஜராத்தில் நவராத்திரி விழா: "கர்பா" நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!
Sep 2, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் நவராத்திரி விழா: “கர்பா” நடனமாடி பெண்கள் கொண்டாட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் பெண்கள் தலையில் மண்பானைகளை வைத்துக்கொண்டு ‘கர்பா’ நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நவராத்திரி பண்டிகையானது அசுரன் மகிஷாசுரனை தோற்கடித்ததையும், தீமையின் மீது நன்மை வென்றதையும் போற்றுகிறது. நவராத்திரியின் 10-வது நாள் தசரா அல்லது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவராத்திரியின் போது ராம்லீலா விரிவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ராம்லீலாவின் போது, ​​ராமர் ராவணனை வெற்றிகொண்ட கதை காட்சிப்படுத்தப்படும்.

இந்த, நவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். இவ்விழா நாட்களில் மக்கள் துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வணங்கி வழிபாடு நடத்துவார்கள். மேலும், இந்த 9 நாட்களில் மக்கள் சடங்கு மற்றும் விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்களைப் படிக்கிறார்கள். புதிய ஆடைகளை அணிவார்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளில் வளமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்காக தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில், 2-ம் நாளான நேற்று இரவு மக்கள் துர்கா தேவியின் அவதாரங்களில் ஒன்றான பிரம்மச்சாரிணியை வணங்கினார்கள். இந்து மத நூல்களின்படி, துர்கையின் வடிவமான பிரம்மச்சாரிணி பார்வதி தேவியால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தவத்தின் அடையாளமாகும். பிரம்மச்சாரிணி வெண்ணிற ஆடைகளை அணிந்து, வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தி இருக்கிறார். இந்த தேவியை வழிபடுவதால், மந்திரம் மற்றும் தவம் செய்யும் சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏராளமானோர் ‘கர்பா’ நிகழ்ச்சியை நடத்தினர். அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்கள் ஆர்வத்துடன் ‘கர்பா’ இசைக்கு நடனமாடினர். அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது பெண்கள் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags: Gujratnavarathiri festivelGarba Dance
Share
Tweet
SendShare
Previous Post

கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம்!

Next Post

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies