தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த தமிழ் படமாக மணிகண்டன் இயக்கிய ‛கடைசி விவசாயி’ தேர்வானது. அதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

இதுதவிர சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி, சிறந்த நடிகராக புஷ்பா படத்தின் அல்லு அர்ஜூன் , சிறந்த நடிகைகளாக கங்குபாய் படத்தின் ஆலியா பட் மற்றும் மிமி படத்தின் கிர்த்தி சனோன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டன.

மேலும் ஆயிரம் கோடி வசூலித்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் 6 தேசிய விருதுகளை வென்றது.

சிறந்த இசையமைப்பாளர்களாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த ஆஸ்கர் விருது வென்ற எம்எம் கீரவாணி, புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த பாடகியாக பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‛ மாயவா ‘ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. மேலும் கருவறை என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

நம்மூர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்தி படமான ஷெர்ஷா படத்திற்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. அதோடு பரபரப்பை கிளப்பிய தி காஷ்மீர் பைல்ஸ் படம் சிறந்த தேசிய படமாக தேர்வாகி இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். அவருடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், கிர்த்தி சனோன், எஸ்.எஸ்.ராஜமவுலி, ஸ்ரேயா கோஷல், பங்கஜ் திரிபாதி, ஸ்ரீகாந்த் தேவா, மணிகண்டன், தேவிஸ்ரீ பிரசாத், எம்எம் கீரவாணி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலரும் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Tags: President Droupadi Murmunationalfilmawards
ShareTweetSendShare
Previous Post

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies