நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !
Jan 14, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து எடுக்க வேண்டும் என சண்டையிட்ட சோயிப் மாலிக்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தொடர்ந்து 8 வது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் கேப்டன் பாபர் அசாம் ஒரு அரை சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார்.

இதனால் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும் இன்னொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக நேரலை விவாதத்தில் கருத்து தெரிவித்துள்ள சோயிப் மாலிக், ” நான் உண்மையை பேச விரும்புகிறேன், பாபர் அசாம் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இதே கருத்தை தான் நான் பல நேர்காணலில் கூறி வருகிறேன். இது என்னுடைய கருத்து என்றாலும் பல விஷயம் தெரிந்து தான் இதை நான் கூறுகிறேன். என்னை கேட்டால் அடுத்த கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி தான் வர வேண்டும்” என்று சோயப் மாலிக் கூறினார்.

இந்தப் பேட்டியின் போது, இதற்கு பதில் அளித்த முகமது யூசுப், ” உலகக்கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கேப்டன் பதவியைவிட்டு பாபர் அசாமை தூக்க வேண்டும் என்று நாம் பேசவே கூடாது.

அதே சமயம் இம்ரான் கான் பாகிஸ்தானின் கேப்டனாக 1983 ஆம் ஆண்டு செயல்பட்டார். இரண்டு முறையும் அவர் தோல்வியை தழுவினார். ஆனால் மூன்றாவது முறையாக தான் அவருக்கு உலகக்கோப்பை கிடைத்தது. எந்த ஒரு நல்ல வீரனையுமே தொடர்ந்து கேப்டன் பதவியில் அமர்த்தி அவரை செயல்பட நாம் அனுமதிக்க வேண்டும்.

பாபர் அசாம் எதனால் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் சொந்தக்காரர் என்பதால் அவருக்கு இந்த பதவியை கொடுக்கவில்லை. என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல கேப்டன் தான். ஒரு தோல்விக்காக பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

அதுவும் இப்படி நாம் பேசுவது அவருக்கு நிச்சயம் அழுத்தத்தையும் நெருக்கடியும் கொடுக்கும். இப்படி ஒரு கருத்தை சோயிப் மாலிக் பேசுவதை அருகில் அமர்ந்திருக்கும் வசீம் அக்ரம், தடுக்காமல் எவ்வாறு அனுமதித்தார் என்று எனக்கு தெரியவில்லை ” என்று நேரலையில் சண்டை போட்டார்.

Tags: cricket pakistan
ShareTweetSendShare
Previous Post

தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டி : ஓவர்கள் குறைப்பு !

Next Post

இஸ்ரேலுக்கு ஆதரவாக மற்றொரு போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies