இஸ்ரேலுக்கு ஆதரவாக மற்றொரு போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக மற்றொரு போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 17, 2023, 08:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்கா தனது மற்றொரு மிகப் பெரிய போர்க் கப்பலையும், போர் விமானங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் போர் நடந்து வருகிறது. அமைதியாக இருந்த இஸ்ரேல் மீது தேவையில்லாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தும், 6,500 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தும், 10,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர்க் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கிறது. முதலில் அமெரிக்காவின் மிகப் பெரிய நாசக்காரக் கப்பலான ஜெரால்டு இஸ்ரேலுக்கு வந்தடைந்த நிலையில், தற்போது ட்வைடு என்கிற மற்றொரு மிகப் பெரிய போர்க் கப்பலையும் அனுப்பி இருக்கிறது. ஜெரால்டு கப்பலைப் போலவே, இக்கப்பலிலும், போர் விமானங்கள், எஸ்கார்டு போர்க் கப்பல்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை (டி.ஓ.டி.) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் இஸ்ரேலிய அமைச்சரவை உறுப்பினர்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் சந்தித்ததில் இருந்து, தொடர்ந்து அந்நாட்டின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும், தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா செய்வதையும் உறுதி செய்கிறது.

இஸ்ரேலின் தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். இவற்றில், வான் பாதுகாப்பு, வெடிமருந்துகள், பீரங்கி மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகளை விரைவாகக் களமிறக்குவதுடன், இஸ்ரேல் மீது மேலும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில், ஜெரால்டு, ட்வைடு ஆகிய போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி அந்நாட்டில் தனது இருப்பை அமெரிக்க வலுப்படுத்தி இருக்கிறது. மேலும், வான்படைகளான எஃப்-15 மற்றும் எஃப்-16 போர் விமானங்களும் மற்றும் A-10 தாக்குதல் படைப்பிரிவுகளையும் இஸ்ரேலில் நிலைநிறுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: americaIsraelWar Ships
Share
Tweet
SendShare
Previous Post

நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !

Next Post

யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த இளம் வீரர் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies