அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை: இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை: இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த அறிவிக்கப்படாத போரால், இஸ்ரேல் திகைத்துப் போனது. எனினும், சுதாரித்துக் கொண்டு கடுமையான பதிலடித் தாக்குதல் கொடுத்து ஹமாஸ் தீவிரவாதிகளை கதறவிட்டு வருகிறது.

இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், போர் தொடங்கிய முதல் நாளே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இப்போரில் இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதன்படி, இஸ்ரேலுக்கு உதவியாக தங்களது நாட்டு போர்க் கப்பல்களை அனுப்பி இருக்கும் அமெரிக்கா, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இன்று இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாகச் செல்கிறார். பைடனின் வருகையை முன்னிட்டு, இஸ்ரேல் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும், ஏராளமான பாதுகாப்பு அதிகாரிகள் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேரிலாந்தின் கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புறப்படு இஸ்ரேலுக்குச் செல்கிறார். அவர் இஸ்ரேலை அடைந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வது தொடர்பாக விவாதிக்க ஜோர்டானுக்குச் செல்கிறார்.

இதுகுறித்து பைடன் தனது சமூக ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹமாஸின் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்வதற்கும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்கும் நான் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறேன். பின்னர், ஜோர்டானுக்குச் செல்வேன். தலைவர்களைச் சந்தித்து மனிதாபிமான உதவிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக விவாதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Joe BidenIsraelVisitSecurity tight
ShareTweetSendShare
Previous Post

511 திறன் மேம்பாட்டு மையங்களைப் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் !

Next Post

வரி ஏய்ப்பு புகார் : தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies