உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம்! - பிரகலாத் சிங் பட்டேல்.   
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம்! – பிரகலாத் சிங் பட்டேல்.   

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக உணவு இந்தியா 2023-ன்  இரண்டாவது பதிப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்,

உலக உணவு இந்தியா என்பது உலகளாவிய இத்துறைச் சார்ந்தோர் முன் உணவுத் துறையின் திறனை காட்டுவதற்கான ஒரு முயற்சியாகும். 11 மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தன்னாட்சி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், இந்த நிகழ்ச்சி முழு அரசு ஒத்துழைப்பு அணுகுமுறைக்கும் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு என்று  சுட்டிக்காட்டினார். உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது

இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும், மற்ற நாட்களில் மேலும் உணவுத்துறைச் சார்ந்தோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கொள்முதல் செய்வோர் சுமார் 1000  பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

உலகளாவிய மிகப்பெரிய உணவு நிகழ்வான உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் 2023 நவம்பர் 3 முதல் 5 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 3 ஆம் தேதி பிரகதி மைதானத்தில் உள்ள புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு நவம்பர் 5-ஆம் தேதி நிறைவுரையாற்றுகிறார்.

உலகின் மிக நீளமான தோசை என்ற கின்னஸ் சாதனையை உருவாக்கும் முயற்சியும் நடைபெற உள்ளது. 60 முதல் 80 சமையல்காரர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத்தில் சிறுதானிய தோசையை உருவாக்க உள்ளனர், இது குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும்.

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ஐ கொண்டாடும் வகையில், 50,000 டெட்ரா பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: central government ministerPraglad Singh Patel.
ShareTweetSendShare
Previous Post

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்!

Next Post

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies