குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் - குடியரசுத் தலைவர்!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் – குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதில் பீகாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, இந்தக் கனவை நனவாக்க, குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பீகாரின் நான்காவது வேளாண் திட்டத்தைக் (2023-2028) குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று பாட்னாவில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பீகாரின் நாட்டுப்புற கலாச்சாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய பகுதியாகும். இது பீகார் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.

விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள், மாநிலத்தின் தொழிலாளர்களில் ஏறத்தாழ பாதி பேருக்கு வேலை வழங்குவது மட்டுமின்றி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, விவசாயத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும்.

பீகார் அரசு 2008 ஆம் ஆண்டு முதல் வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கடந்த மூன்று வேளாண் திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, மாநிலத்தில் நெல், கோதுமை மற்றும் மக்காச்சோளத்தின் உற்பத்தித்திறன் சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

காளான், தேன், மக்கானா மற்றும் மீன் உற்பத்தியில் பீகார் முன்னணி மாநிலமாக மாறியுள்ளது. நான்காவது வேளாண் திட்டத்தை அறிமுகம் செய்வது இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கிய  நடவடிக்கை ஆகும் என்று கூறினார்.

பீகார் விவசாயிகள், விவசாயத்தில் புதிய சோதனைகளை மேற்கொள்வதற்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர் நாளந்தாவின் விவசாயிகளை “விஞ்ஞானிகளை விட பெரியவர்கள்” என்று அழைத்தார்.

நவீன விவசாய முறைகளைப் பின்பற்றிய போதும், பீகார் விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் தானிய வகைகளை பாதுகாத்து வருவது,  மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் ஒத்திசைவுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறினார்.

விவசாய செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இயற்கை விவசாயம் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.  இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கங்கைக் கரையோர மாவட்டங்களில் இயற்கை வழித்தடத்தை பீகார் அரசு உருவாக்கியிருப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது..

பீகார் நீர் வளம் நிறைந்த மாநிலமாகக் கருதப்படுகிறது, ஆறுகள் மற்றும் குளங்கள் இந்த மாநிலத்தின் அடையாளமாக உள்ளன. இந்த அடையாளத்தைப் பராமரிக்க, தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று  கூறினார்.

தற்போதைய விவசாய முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கலாம், தண்ணீர் வளம் சுரண்டப்படுவதைக் குறைக்கலாம், மண் வளத்தைப் பாதுகாக்கலாம், அனைத்திற்கும் மேலாக, சமச்சீரான உணவை மக்களுக்கு வழங்க முடியும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதில் பீகாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, இந்தக் கனவை நனவாக்க, குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என்றார்.

பீகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முழுமையான வளர்ச்சியைத் தவிர வேறு வழியில்லை என்றும், கொள்கை வகுப்பவர்களும், பீகார் மக்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சின்ன வெங்காயம் விலை உயர்வு: ரூ. 120-க்கு விற்பனை!

Next Post

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies