பதவியிலிருந்து விலகிய பயிற்சியாளர் : காரணம் என்ன ?
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவியிலிருந்து விலகிய பயிற்சியாளர் : காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷேன் பான்ட் விலகியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் தான். இரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ஐபில் தொடரில் இரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

சிஸ்கே மற்றும் எம்ஐ விளையாடும் போட்டிகள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிப் போன்று இரசிகர்களிடையே பார்க்கப்படும். மேலும் இரு அணிகளும் இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த ஷேன் பான்ட், தற்போது தனது பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஷேன் பான்ட் ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ஆடினார்.

பின்னர் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றது. 2015, 2017, 2019 மற்றும் 2020 என நான்கு ஐபிஎல் கோப்பை வெற்றிகளில் பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்டின் பங்கு மிகவும் அதிகம் இருந்தது.

இதே காலகட்டத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவ்வப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷேன் பான்ட், மலிங்கா இருவரும் சேர்ந்தே பணியாற்றினார்கள்.

ஆனால், மலிங்கா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐஎல்டி20 தொடர் அணியான எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பான்ட் கடந்த ஆண்டு செயல்பட்டார்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே ஷேன் பான்ட் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தற்போது ஷேன் பான்ட் பதவி விலகி இருக்கிறார்.

அவர் பதவி விலகியதன் காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

Tags: ipl cricketShane Pont
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Next Post

சமாஸ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கான் உள்ளிட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies