திமுக ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 19, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோபிச்செட்டிப் பாளையத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

இப்பகுதியில், தானதர்மங்கள் பல செய்த வள்ளல் கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் நினைவாக கோபிச்செட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள நம்பியூர் அருகே, 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பழமையும் வரலாறும் கொண்ட பகுதி இது.

பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000… pic.twitter.com/asa5LikmBq

— K.Annamalai (@annamalai_k) October 19, 2023

பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கோபிக்கே உரித்தான சேனைக்கிழங்கும், பூசணிக்காயும் 2500 ஏக்கர் அளவுக்கு இங்கே பயிரிடப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், விவசாய மேம்பாட்டிற்காக குளர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதிகளில், பெரும்பாலும் பனை ஏறும் தொழில் செய்து வருகின்றனர் இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை சேமித்து விற்பனை செய்ய சேமிப்பு கிடங்கு அமைத்து தர பல முறை மனு அளித்தும், தற்போது வரை சேமிப்பு கிடங்கு அமைத்து தரவில்லை.

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 56ல், பனை வெல்லத்தை விவசாய கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று கூறியிருந்தார்கள். அதனையும் நிறைவேற்றவில்லை.

கொடிவேரி அணை 1125ஆம் ஆண்டு ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. ஒரு ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.

ஆற்றின் நீரியல் போக்கு, திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிற நவீன அறிவியல் கூறும் உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளை, அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். இது தான் தமிழரின் அறிவியல் அறிவு.

கோபி பகுதியில், காந்தி அடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர். தனது குடும்ப சொத்தான 345 ஏக்கர் நிலத்தை விற்று பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு தங்கும் வசதிகொண்ட பள்ளிகளை கட்டிக்கொடுத்தவர்.

கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்று தடை விதித்தார். கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். 1972-ல் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றார். கோபி நகரம் தியாகி லட்சுமண ஐயர் போன்ற சீர்திருத்தவாதிகளால் பெருமை கொள்கிறது.

ஈரோடு மாவட்டத்துக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நலத் திட்டங்கள் ஏராளம். ஆனால் திமுக, ஈரோடு மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, பாரதப் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இன்று இஸ்ரேல் செல்கிறார் இங்கிலாந்து பிரதமர்

Next Post

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! 

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies