திமுக ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jun 14, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோபிச்செட்டிப் பாளையத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

இப்பகுதியில், தானதர்மங்கள் பல செய்த வள்ளல் கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் நினைவாக கோபிச்செட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள நம்பியூர் அருகே, 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பழமையும் வரலாறும் கொண்ட பகுதி இது.

பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000… pic.twitter.com/asa5LikmBq

— K.Annamalai (@annamalai_k) October 19, 2023

பட்டுக்கூடு உற்பத்தியில், கோபிசெட்டிபாளையம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. கோபி என்றாலே விவசாயத்துக்கு பெயர்போன பகுதி. 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் இங்கு நடைபெறுகிது. விவசாயத்தின் மூலம் மட்டுமே 1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கோபிக்கே உரித்தான சேனைக்கிழங்கும், பூசணிக்காயும் 2500 ஏக்கர் அளவுக்கு இங்கே பயிரிடப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், விவசாய மேம்பாட்டிற்காக குளர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

திமுக கூறிய, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு டன்னுக்கு 4000 ரூபாய், வாழைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் கிடங்கு அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதிகளில், பெரும்பாலும் பனை ஏறும் தொழில் செய்து வருகின்றனர் இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டி, பனைவெல்லம் போன்றவற்றை சேமித்து விற்பனை செய்ய சேமிப்பு கிடங்கு அமைத்து தர பல முறை மனு அளித்தும், தற்போது வரை சேமிப்பு கிடங்கு அமைத்து தரவில்லை.

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 56ல், பனை வெல்லத்தை விவசாய கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று கூறியிருந்தார்கள். அதனையும் நிறைவேற்றவில்லை.

கொடிவேரி அணை 1125ஆம் ஆண்டு ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. ஒரு ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.

ஆற்றின் நீரியல் போக்கு, திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிற நவீன அறிவியல் கூறும் உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளை, அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். இது தான் தமிழரின் அறிவியல் அறிவு.

கோபி பகுதியில், காந்தி அடிகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர். தனது குடும்ப சொத்தான 345 ஏக்கர் நிலத்தை விற்று பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு தங்கும் வசதிகொண்ட பள்ளிகளை கட்டிக்கொடுத்தவர்.

கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்று தடை விதித்தார். கோபி நகர குடிநீர்த் திட்டத்தைக் கொண்டுவந்ததோடு, தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாக வழங்கினார். 1972-ல் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றார். கோபி நகரம் தியாகி லட்சுமண ஐயர் போன்ற சீர்திருத்தவாதிகளால் பெருமை கொள்கிறது.

ஈரோடு மாவட்டத்துக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நலத் திட்டங்கள் ஏராளம். ஆனால் திமுக, ஈரோடு மாவட்டத்துக்குக் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணித்து, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, பாரதப் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இன்று இஸ்ரேல் செல்கிறார் இங்கிலாந்து பிரதமர்

Next Post

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! 

Related News

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies