அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!
Mar 15, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்படும் இராம் லல்லாவின் சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிற்பி விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானப் பணியை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இக்கோவில் 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இக்கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும் இராம் லல்லா சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சிலையை வடிக்கும் சிற்பிகளில் ஒருவரான விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பதூரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்புக் கல்லால் செதுக்கப்படும் இச்சிலை, நாம் கற்பனை செய்ததைவிட, உலகின் மிக அழகான இராமர் சிலையாக இருக்கும். இச்சிலையின் அழகு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

எங்கள் முயற்சிகள்  நல்ல பலனைத் தந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் பணி முடியும் தருவாயில் உள்ளது. சில இறுதிக்கட்டப் பணிகளுக்குப் பிறகு, இம்மாத இறுதிக்குள் சிலை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

இவர் தனது வழிகாட்டியான கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி கணேஷ் பட் என்பவருடன் இணைந்து இரவு பகலாக சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

பதூரியா மட்டும் இராமர் சிலையை வடிக்கவில்லை. 3 சிற்பிகள் 3 வகையான சிறப்புக் கற்களைப் பயன்படுத்தி 3 சிலைகளை வடித்து வருகின்றனர். இவற்றில் மிகச்சிறந்த சிலை கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும். மற்ற 2 சிலைகளும் மற்றொரு கோவிலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வாசுதேயோ காமத்தின் ஓவியத்தின் அடிப்படையில் இச்சிலை வடிக்கப்படுகிறது. இவரது இராமாயணத் தொடரின் ஓவியங்கள் உலகளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பால்ஸ்வரூப் (குழந்தை) இராமர் சிலை. 5 வயதுக் குழந்தையாக தாமரையின் மீது நின்று, ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் அம்பையும் ஏந்தியவாறு இருக்கும். இதுதவிர, இச்சிலை சிறந்த சிற்பக் கலையோடு கூடிய வடிவமைப்புகளுடன் இருக்கும். இராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் 51 அங்குல உயரமுள்ள சிலையில் செதுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

Tags: Ram MandirBalswaroop idol31st October
ShareTweetSendShare
Previous Post

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

Next Post

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies