அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!
Jun 14, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்படும் இராம் லல்லாவின் சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிற்பி விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானப் பணியை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இக்கோவில் 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இக்கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும் இராம் லல்லா சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சிலையை வடிக்கும் சிற்பிகளில் ஒருவரான விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பதூரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்புக் கல்லால் செதுக்கப்படும் இச்சிலை, நாம் கற்பனை செய்ததைவிட, உலகின் மிக அழகான இராமர் சிலையாக இருக்கும். இச்சிலையின் அழகு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

எங்கள் முயற்சிகள்  நல்ல பலனைத் தந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் பணி முடியும் தருவாயில் உள்ளது. சில இறுதிக்கட்டப் பணிகளுக்குப் பிறகு, இம்மாத இறுதிக்குள் சிலை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

இவர் தனது வழிகாட்டியான கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி கணேஷ் பட் என்பவருடன் இணைந்து இரவு பகலாக சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

பதூரியா மட்டும் இராமர் சிலையை வடிக்கவில்லை. 3 சிற்பிகள் 3 வகையான சிறப்புக் கற்களைப் பயன்படுத்தி 3 சிலைகளை வடித்து வருகின்றனர். இவற்றில் மிகச்சிறந்த சிலை கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும். மற்ற 2 சிலைகளும் மற்றொரு கோவிலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வாசுதேயோ காமத்தின் ஓவியத்தின் அடிப்படையில் இச்சிலை வடிக்கப்படுகிறது. இவரது இராமாயணத் தொடரின் ஓவியங்கள் உலகளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பால்ஸ்வரூப் (குழந்தை) இராமர் சிலை. 5 வயதுக் குழந்தையாக தாமரையின் மீது நின்று, ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் அம்பையும் ஏந்தியவாறு இருக்கும். இதுதவிர, இச்சிலை சிறந்த சிற்பக் கலையோடு கூடிய வடிவமைப்புகளுடன் இருக்கும். இராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் 51 அங்குல உயரமுள்ள சிலையில் செதுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

Tags: Ram MandirBalswaroop idol31st October
ShareTweetSendShare
Previous Post

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

Next Post

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies