அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் சிலை அக்டோபர் 1-க்குள் ஒப்படைக்கப்படும்: சிற்பி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்படும் இராம் லல்லாவின் சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிற்பி விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுமானப் பணியை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார். இக்கோவில் 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இக்கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும் இராம் லல்லா சிலை அக்டோபர் 31-ம் தேதிக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சிலையை வடிக்கும் சிற்பிகளில் ஒருவரான விபின் பதூரியா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பதூரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்புக் கல்லால் செதுக்கப்படும் இச்சிலை, நாம் கற்பனை செய்ததைவிட, உலகின் மிக அழகான இராமர் சிலையாக இருக்கும். இச்சிலையின் அழகு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

எங்கள் முயற்சிகள்  நல்ல பலனைத் தந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் பணி முடியும் தருவாயில் உள்ளது. சில இறுதிக்கட்டப் பணிகளுக்குப் பிறகு, இம்மாத இறுதிக்குள் சிலை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

இவர் தனது வழிகாட்டியான கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி கணேஷ் பட் என்பவருடன் இணைந்து இரவு பகலாக சிலையை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

பதூரியா மட்டும் இராமர் சிலையை வடிக்கவில்லை. 3 சிற்பிகள் 3 வகையான சிறப்புக் கற்களைப் பயன்படுத்தி 3 சிலைகளை வடித்து வருகின்றனர். இவற்றில் மிகச்சிறந்த சிலை கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்படும். மற்ற 2 சிலைகளும் மற்றொரு கோவிலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வாசுதேயோ காமத்தின் ஓவியத்தின் அடிப்படையில் இச்சிலை வடிக்கப்படுகிறது. இவரது இராமாயணத் தொடரின் ஓவியங்கள் உலகளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பால்ஸ்வரூப் (குழந்தை) இராமர் சிலை. 5 வயதுக் குழந்தையாக தாமரையின் மீது நின்று, ஒரு கையில் வில்லையும், மற்றொரு கையில் அம்பையும் ஏந்தியவாறு இருக்கும். இதுதவிர, இச்சிலை சிறந்த சிற்பக் கலையோடு கூடிய வடிவமைப்புகளுடன் இருக்கும். இராமர் தொடர்பான அனைத்து அடையாளங்களும் 51 அங்குல உயரமுள்ள சிலையில் செதுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

Tags: Ram MandirBalswaroop idol31st October
Share
Tweet
SendShare
Previous Post

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

Next Post

நாமக்கல் கவிஞர் 135வது நாள் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies