இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் - சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!
Oct 28, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி: ஒப்புக்கொண்ட தொழிலதிபர் – சிக்கலில் திரிணாமுல் காங்கிரஸ்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, தன்னிடம் இலஞ்சம் வாங்கியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இலஞ்சம் வாங்கியிருக்கிறார்.

இவர் 2019 – 2023-க்கு இடையில், நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் கேட்கப்பட்டவை. இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ஹிராநந்தனி குழுமம் ரூபாய் 2 கோடியும், விலையுயர்ந்த ஐபோன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த குற்றச்சாட்டுகளை, மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி மறுத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதானி குழுமம் குறித்து கேள்வி கேட்க, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தியதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தன் கையெழுத்துடன் கூடிய அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அதானி குழுமத்தைக் குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, மஹுவா மொய்த்ராவைப் பயன்படுத்தினேன். இதற்காக, அவரது நாடாளுமன்ற உள்நுழைவு கடவுச்சொல்லைப் பயன்படுத்தினேன். இதற்காக, வெளிநாடு சுற்றுலா செலவு, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை, மஹுவா மொய்த்ரா கேட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: trinamool mp mahua moitra
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 3 மாதங்களில் 20 லட்சம் யூடியூப் வீடியேக்கள் நீக்கம்!

Next Post

மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?

Related News

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies