ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!
Oct 6, 2025, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள் அரசு முறைப் பயணமாக 19-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். இப்பயணத்தின்போது சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் முக்கியத் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுகிறார். முன்னதாக, நேற்று நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அப்போது, சிங்கப்பூரின் நிலைமை மற்றும் இந்தியாவிற்கு சாத்தியமான அம்சங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் பிராந்திய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினேன். எங்களின் ஆலோசனைகள் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஆய்வு செய்து, இந்தியாவிற்கான அவற்றின் தாக்கங்களை மதிப்பீடு செய்தன. கொள்கை உருவாக்கத்தில் எங்கள் தூதர்கள் வழங்கும் நுண்ணறிவு மதிப்புமிக்க உள்ளீடுகள்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை சந்தித்துப் பேசினார்.  இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று காலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களின் விவாதங்கள் நெருக்கமான நீண்டகால உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் புதிய களங்களை மையமாகக் கொண்டிருந்தன. இந்த யோசனைகளை ஐ.எஸ்.எம்.ஆர். கூட்டத்தில் அமல்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் 2015-ல் ஒரு மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்ட, ஒரு வரலாற்று உறவை அனுபவித்து வருகின்றன. 2023-ல் இந்திய தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு தரப்பினரும் பல அமைச்சர்களின் தொடர்புகளை மேற்கொண்டனர். இதற்காக சிங்கப்பூர் விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இச்சந்திப்பின் மூலம் இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக, வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சோனின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, ​​வியட்நாம் பிரதமர் பாம்மின் சினை சந்தித்தவர், கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார ஆணையத்தின் தலைவரான லீ ஹோவாய் டிரங்க்குடனும் கலந்துரையாடினார்.

மேலும், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த 18-வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட இந்தியா-வியட்நாம் விரிவான மூலோபாய கூட்டுறவின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

Tags: singaporeJaishankar
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை: மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு!

Next Post

சிபிஐ-யில் அதிரடி மாற்றம்: என்ன காரணம்?

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies